அழகான வாழ்க்கை ஆனந்தமாய்-----------நிஷா

அழகான வாழ்க்கை ஆனந்தமாய்......
போட்டி கவிதை. .


விடிகாலை வேளையிலே...என்
கடிகாரம் சிரிக்குதடி....
அதிகாலை மலர்ந்ததை
அழகாகச் சொல்லுதடி...
மனமெல்லாம் நிறைந்திங்கே
மணம் தன்னை பரப்புதடி....
அழகான வாழ்வை இன்று
அசைபோட்டு பார்க்குதடி.....

கடந்தகால மேகமெல்லாம்
கரைந்திங்கே போகுதடி...
நிகழ்கால நினைவெல்லாம் என்
நெஞ்சினிலே ஓடுதடி....
அலைபோல எண்ணங்கள்
அடுக்கடுக்காய் தோன்றுதடி...
அழகான வாழ்வை இன்று
அசைபோட்டு பார்க்குதடி....

எழில் கொஞ்சும் அம்மாவின்
முகம் வந்து போகுதடி...
ஏனோ நானிருந்த கருவறையின்
இருள் இன்று இனிக்குதடி....
ஈரைந்து மாதத்தின் நினைவெல்லாம்
எனக்குள்ளே மலருதடி....
அழகான வாழ்வை இன்று
அசைபோட்டு பார்க்குதடி. ...

நான் கற்ற கல்வி -என்
நாவுக்குள் இனிக்குதடி...
நான் கொண்ட தன்னம்பிக்கை
நிழலாகச் சுழலுதடி....
நான் நேசிக்கும் இதயமெல்லாம்
நட்போடு வாழுதடி...
அழகான வாழ்வை இன்று
அசைபோட்டு பார்க்குதடி. ..


என் தேசம் இதுவென்பதில்
என்னிதயம் பெருமிதம் கொள்ளுதடி.
மதம் தாண்டி மனிதநேயம் தேடி
என் மனம் ஆறுதல் அடையுதடி...
வையத்திலே என் தேசம்
வாழ்வாங்கு வாழுதடி...
அழகான வாழ்வை இன்று
அசைபோட்டு பார்க்குதடி. ..

சாதித்தது என்னவென்று
சிந்திக்கும் நேரமடி . ....
நமக்குள்ளே ஒற்றுமையாய்
உயர்ந்திட வேண்டுமடி...
அன்பென்னும் ஆனந்தம் தேடி
ஆயிரம் சுகம் காணுதடி...
அழகான வாழ்வை இன்று
அசைபோட்டு பார்க்குதடி. ...

எழுதியவர் : நிஷா (23-Aug-14, 8:57 pm)
பார்வை : 578

மேலே