ஆவது தமிழால்

ஆவது தமிழால்.

அமைதி என்றால் தமிழகம்.
ஆவது அடுத்து இந்தியா.
இலங்கை இந்தியா ஒன்றாகும்.
ஈழம் இலங்கை தலையாகும்.
உலகின் முதன்மை தமிழாகும்.
ஊக்கம் அமைதி சிறப்பாகும்.
எழுந்து இந்தியா வல்லரசாகும்.
ஏற்றம் கண்டு நல்லரசாகும்.
ஐந்து நிலங்களும் பைம்பொழிலாகும்.
ஒற்றுமை அன்று உண்மையுமாகும்.
ஓதம் உணர்ந்து வெண்மையுமாகும்.
ஔவியம் அகன்று செவ்வழியாகும்.
அஃதும் தமிழால் தானுருவாகும்.

கொ.பெ.பி.அய்யா.

ஓதம்—ஞானம்,தெளிவு,அறிவு.
ஔவியம்—பொறாமை.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (24-Aug-14, 12:14 pm)
Tanglish : aavathu thamizhaal
பார்வை : 139

மேலே