அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

அழகான வாழ்க்கை ஆனந்தமாய்,
அடர்ந்த காட்டில் அவைகளுக்கு !

அழிக்கும் அரக்கனாக அங்கும்,
அவதரித்த மிருகங்கள் மனிதர்கள் !

மனதில் இரக்கமே இன்றி,
மரங்களை வெட்டி வீழ்த்தி,

காட்டை நாடாக ஆக்கி,
நாட்டை நரகமாக ஆக்கிவிட்டோம் !

வாழ்க்கை அழிந்ததை எண்ணி,
வாழ்வையே தொலைத்தது வரிப்புலி !

கைப்பேசியில் நாம் பேசிட,
காணாமல் போனது குருவிகள் !

உலகம் நலமாக இருந்திட,
ஒருங்கிணைந்து பாதுகாப்போம் காடுகளை !

அனைத்தையும் காத்து வாழ்வோம் !
அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் !!

எழுதியவர் : கர்ணன் (24-Aug-14, 4:24 pm)
பார்வை : 137

மேலே