தாங்கவொண்ணாது
சிலரை நினைத்தால் இதயம் துடிக்கும்
சிலரை நினைத்தால் இதயம் வெடிக்கும்
சிலரை பார்த்தால் கண் கவி வடிக்கும்
சிலரை பார்த்தால் கண்ணீர் சிந்தும்
சிலர் காட்டும் அன்பு நம்மை வளர்க்கும்
சிலர் காட்டும் அன்பு நம்மை அழிக்கும்
சிலரின் மௌனம் நம்மை ஆனந்தப் படுத்தும்
சிலரின் மௌனம் நம்மை ஆழ்ந்த சோகமாக்கும்
சிலரின் பிரிவு வசந்தம் கொடுக்கும்
சிலரின் பிரிவு வலியைக் கொடுக்கும்
சிலர் மேல் பாசம் தோன்றும்
சிலர் மேல் ஆசை தோன்றும்
அளவு கடந்த அன்பு வைப்பதும்
அளவு கடந்த பாசம் காட்டுவதும்
அளவுகடந்த காதல் கொள்வதும்
ஒருவர் மேல் அது பிரிவைக்
கொடுக்கும் போதுதான் புரியும்
உயிர் வலி என்பது என்னவென்று.