காதல் குவளை

திருடும் கண்ணை பார்க்காதே அவளிடம்,
திருடு போகும் உன் மனம்.
பேசாதே மலர் இதழிடம்,
உன் மதி சாகும் தமிழிடம்.
அருகில் அமராதே அவளிடம்.
பறி போகுமே உன் புகலிடம்.
நினைத்து நினைத்து பார்க்காதே அவளை,
உன்னை குளிரிலிம் நனைத்திடுமெ
காதல் குவளை.
உயிர் இருந்தும் கண்கள் திறந்தே உறங்குவாய்,
காதல் உறைவிடம்
உன் கண்ணில் உள்ளதால்.

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (27-Aug-14, 9:30 pm)
Tanglish : kaadhal kuvalai
பார்வை : 62

மேலே