சிலை

ஓர் மழை நாளில்
என் ஆசைகள் நினைந்தன?
ஜன்னலோரம் அவன்.....
பித்தாய் நான்
நானும் அழகுதான்
ஏன் ஏறெடுத்தும்
பார்க்கவில்லை என்னை!!!!
ஏக்கம் நிறைந்த
விழிகள்
புன்னகை சிந்தும்
உதடுகள்
முத்து போன்ற
முல்லை பற்கள்
கவிதயாய் கண்கள்
காதலால்
கசிந்து உருகும்
மெல்லிய வதனம்
இத்தனை இருந்தும்
ஏன் இந்த கதவடைப்பு
அவனிடம்
என் மனக்குமுறல்
வெடிக்க
கண்ணாடி முன்
நின்றேன்
கருஞ்சிலையாம் நான்
என் நிறம்
கண்களை உறுத்திற்று
கருப்பினும் நான்
பெண்தானே!!!!!!!!

எழுதியவர் : farmija (29-Aug-14, 8:30 pm)
Tanglish : silai
பார்வை : 82

மேலே