கண்படுமே பிறர் கண்படுமே
கிருஷ்ண தேவன் இயற்றிய 'உன்னில் ஒரு புனிதயாத்திரை' கவிதையை வாசித்தும்,
கவிதைக்கு அளித்திருந்த பெண்ணையும் பார்த்ததும் என் மனதில் கவிஞர் கண்ணதாசன்
இயற்றி, எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி இசையமைப்பில் 1962 ஆம் ஆண்டில்
வெளிவந்த காத்திருந்த கண்கள் திரைப்படத்தில் ஜெமினி கணேசனுக்காக பி.பி. ஸ்ரீனிவாஸ்
பாடிய பாடல் 'கண்படுமே பிறர் கண்படுமே' நினைவுக்கு வந்தது.
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா? (கண்படுமே)
புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?
பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா? (கண்படுமே)
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போலுன் கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை மூடு - தமிழ்க்
காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு (கண்படுமே)
கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம் - இந்த
மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம் (கண்படுமே)
இப்பாடலை யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம்.