ஒரு பெயர் போதும் அனைவருக்கும்

ஒரு பெயர் போதும் அனைவருக்கும்
அணில்குமார் சுனில்குமார்
எலிக்குமார் ஓணான்குமாரென்று
விதவிதமான பெயரெல்லாம்
நமக்கெதற்கு?
மூன்றுவரிக் கவிதைக்கெல்லாம்
ஹைக்கூ தான் தலைப்பு என்றால்
மனிதராய் நடமாடும் அனைவருக்கும்
ஒருபெயர் போதும் அவரையழைக்க.
எல்லாக் கவிதைக்கும் ஒரே தலைப்பு
எல்லோர்க்கும் ஒருபெயர் போதுமே
பெயர் சூட்டுவதிலாவது பிறக்கட்டும்
உலகம் போற்றும் சமத்துவம்.
(வெண்ணெய் ஒருகண்ணுக்கும்
சுண்ணாம்பு மறுகண்ணுக்கும்
வைப்பதுவா நியாயம்?)