விவசாயி
விதைகள் பல விதைக்க
பயிர்கள் நான் வளர்க்க
செடிகள் அழகை ரசிக்க
மரங்களும் வளர -நானும்
விவசாயி என்ற கர்வம் வந்தது.....
விதைத்த விதைகள் வீரிட்டு வளர்ந்தன...
செடிகொடிகளோ எனைக்காண தலைகாட்டின
மரங்கள் மண்ணை முட்டி வளர்ந்தன...
ஒரு சில ஏமாற்றியபோதும் -என் உள்ளம்
நீயும் விவசாயி என்றது....
நான் செய்யும்
சின்னசிறு விவசாயம் என்னை
எனக்கே கற்றுக்கொடுகிறது...
விவசாயி போல்
அனுபவம் இல்லை.....
பயிர்களின் பக்குவம் தெரியவில்லை
ஆனால்
ஏதோ விதைத்தேன்....
ஓவ்வொரு பயிரும் வளரும்போது
விவசாயி அடைந்திட்ட ஆனந்தம் என்னுள்...
நானும் விவசாயி என்ற பரவசம் மட்டும்
என் மனதுள்....
நான் பட்டதாரி என்பதைவிட
விவசாயி என்றே சொல்ல
மனம் ஆசைப்படுகிறது!!...
-மூ.முத்துச்செல்வி