கவிதைக் கொலைகள்

கவிதைகளின் துணையில்
காதல் காவியங்களின்
அரங்கேற்றம் நடக்கிறது
காதலை உள்ளம் உணரும் போது
கவிதைகளும் உயிர்பெறுகிறது

அத்தனை கவிஞர்களும்
காதலிப்பதால்தான் - அவர்களின்
கவிதைகளுடன் வாழ்கிறார்கள்
நேசிக்கப்படாத கவிதைகளால்
மனதளவில் வஞ்சிக்கப்படுகிறார்கள்

காதல் உணர்வுகளால்
உருவாகின்ற கவிதைகளை
காதலின்றிய பார்வையால்
சிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால்
ஏங்குகிறது கவிதைகளும் கனவுகளும்

கருவுக்குள் காதலைவைத்து
காதலை உணர்வுக்குள் வைத்து
உணர்வுகளால் உருவாகும் கவிதைகளை
உயிருள்ள குழந்தைகளாய்
யாசிக்கிறார்கள் கவிஞர்கள்

அத்தனை கவிதைகளும்
மொத்தமாய் ஒவ்வொரு உயிர்கள்
வெறுப்பை ஆயுதமாக்கி
பொறுப்பின்றிய கொலைகள்
கவிதைக்கொலைகளாய் சாதாரணமாகிறது

எழுதியவர் : நேசமுடன் ஹாசிம் (9-Sep-14, 6:11 pm)
Tanglish : kavithaik kolagal
பார்வை : 65

மேலே