மயக்கம் தெளிந்தது

என்னை சுற்றி அன்பு நிறைந்திருந்தாலும்
தனிமையை மட்டும் விரும்புகிறது என் மனம்..
அன்பே உன் நினைவு நித்தம் என்னை
கண்ணீரால் மிதக்க வைக்கிறது...
உன்னுடன் சுகந்திரமாய் சுற்றி திரிந்த
அந்த நாட்கள் தினம் தோறும் என்னை
துடி துடிக்க வைக்கிறது.. நான் உன் மீது
வைத்துள்ள அன்பை மறக்க முடியாமல்
நாள் தோறும் நொடிக்கு நொடி வேதனையால்
வாடுகிறேன்....
என் மனவேதனையை யாரிடமும் சொல்ல
முடியாமல் மனதிலே வைத்துக் கொண்டு
பித்தம் பிடித்தவள் போல் உள்ளேன்..
என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது
உன் ஏமாற்றம் மட்டுமே.......
உன் மனம் மாறும் என்றே இந்த நொடிவரை
காத்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் உன் மனம் மாறவில்லை.. உன் ஆசை வேற ஒரு பெண்ணின்
பக்கம் அழைத்து சென்றது..
அப்பொழுது தான் உணர்கிறேன் என் அம்மா
மட்டுமே என் மீது நிரந்தரமாக அன்பு உள்ளவள் என்று..
உனக்காக வாழ்ந்ததை தவிர்த்து எனக்காக வாழ
ஆரம்பித்துவிட்டேன்... உன்னை மட்டும் நினைத்து கொண்டிருந்த காலம் எல்லாம் கடந்து விட்டது....