நீ இருக்கும் தூரம் வரை

நீ இருக்கும் தூரம் வரை ....!!!

என்னவனே ..
நீ இருக்கும் தூரம் வரை
என் எண்ணங்களும்
நீண்டு கொண்டே செல்கிறது ....!!!

எண்ணங்கள் நீண்ட
தூரம் போல் -என்
கண்கள் நீ இருக்கும்
இடத்தை சென்றிருந்தால்
கண்கள் கண்ணீர்
வெள்ளத்தில் நீந்தாதடா ....!!!

திருக்குறள் : 1170
+
படர்மெலிந்திரங்கல்
+
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 90

எழுதியவர் : கே இனியவன் (11-Sep-14, 9:17 pm)
பார்வை : 151

மேலே