தொலைந்து போன தோழி

பேரன்பால் என்னை
பேதைமை ஆக்கிய
தோழியே உன்னை தேடுகிறேன்....

வாதங்களால் நீ என்னை
வம்பிற்கு இழுத்த அந்த
வசந்த காலங்களை தேடுகிறேன்...

மழை நாளில்
குடையாய் மாறிய
உன் துப்பட்டாவை தேடுகிறேன்...

மனம் எல்லாம்
நிறைந்திருக்கும் அந்த
மழலை முகம் தேடுகிறேன்...

விழிகள் மட்டும் மொழிகள்
பேசி நாம் விடைபெற்ற
அந்த நிமிடங்களை தேடுகிறேன்....

விருப்பம் இல்லா....
அந்த பிரிவை எண்ணி நான்
நித்தம் நித்தம் வாடுகிறேன்...

எழுதியவர் : எம்.செல்வ கணேஷ் (16-Sep-14, 4:59 pm)
சேர்த்தது : எம். செல்வ கணேஷ்
பார்வை : 96

மேலே