என்ன சொல்ல வருகிறாய் - இராஜ்குமார்

என்ன சொல்ல வருகிறாய்
==========================

உனை காணாத கணங்களில்
பார்வை உடனேப் பறிக்கிறாய் ..!
உனைப் பேசாதப் பொழுதினில்
குரலை குத்திக் கிழிக்கிறாய் ..!

உனை ரசிக்காத ரசனையில்
மனதை ரணமாய் சிதைக்கிறாய் ..!
உனை அழைக்காத கனவினில்
விழியைப் பிடுங்கி வீசுகிறாய் ..!

உனை படிக்காத நூல்களில்
கருத்தை கடத்தி கருக்கினாய் ..!
உனை மிரட்டாத கதைகளில்
உணர்வை உரித்து உதைக்கிறாய் ..!

உனை வரையாத ஓவியத்தில்
வண்ணம் கலைத்து வதைக்கிறாய் ..!
உனை எழுதாத கவிதையில்
எழுத்தை முறைத்து அழிக்கிறாய் ....!


- இராஜ்குமார்

நாள் : 23 - 6 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (18-Sep-14, 11:07 pm)
பார்வை : 91

மேலே