கவிதை ஊறுமடி

" நான் மட்டும் அறிந்த எனது கவிதையே..
" தைமாத மேகமெனத் தவழ்ந்தாடும் பூங்கொடியே...
" என் கையோடு நீ இணைந்தால் கற்பனைகள் ஊறுமடி...
" முக்காடு நீக்கி உந்தன் முகநிலவைப் பார்த்தபின்பு...
" எக்காடு வந்தாலும் ஏக்கம் எனக்கில்லையடி..
" பூக்காட்டுக் கூந்தலினைப் புறமெடுத்து முத்தமிட்டால்..
' சாக்காடு வந்தாலும் சஞ்சலமேன் கூடுமடி..
" பொங்கும் நடந்தோளில் புல்லரித்து வீழ்ந்துவிட்டால்..
" தங்குதடை இல்லாமல் தமிழ் கவிதை ஊறுமடி