இங்கு திசைகளே இல்லை

நிலவை
குத்தகை
கேட்டேன்..
செவ்வாய்
தர மறுத்தாள்.
ஆழிப் பேரலையாய்
என்னை அமுக்கு என்றேன்
அந்தமான்
வந்து நின்று
அடித்து போட்டது.
கைகளும்
கால்களும்
கட்டப் பட்ட நிலையில்
என்
கனவு மட்டும்
இன்னொரு
வெள்ளி கொலுசுக்காய்
செயற்கைக் கோள்
அனுப்பியது
என் மன வானில் .

எழுதியவர் : சுசீந்திரன். (21-Sep-14, 10:02 am)
பார்வை : 76

மேலே