காற்றில் கலக்கணும் கவிதை - இராஜ்குமார்
காற்றில் கலக்கணும் கவிதை
============================
என்காயம் கொட்டும்
இரத்தச் சொட்டில்
பேனா நனைத்து
காதல் கவியெழுத
காற்றில் கலக்கணும்
கவலை நினைவு
கண்ணீரில் கரையாத
காதல் அழியாமல்
வரிகளில் வாழணும்
வார்த்தை ஒன்று
வருந்தினால் காதல்
கோபுரம் ஏறியேறி
குதுகலமாய் குதிக்கணும்
ரசனையிலா ரகசிய
திட்டமிட்ட தேடல்
முகத்திரை கிழிய
வெக்கப்பட்டு ஓடணும்
- இராஜ்குமார்
நாள் : 24 - 7 - 2011