பெண் நிலா-8

இதோ ரகு யுஎஸ் போய் இன்றோடு ஒருவாரமாகிவிட்டது....

ரகு அடிக்கடி ரேகாவின் மூலமாக யிடம் பேச முயற்சித்தான்...

மான்சி இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல் பேச மாட்டாள்.
கல்லூரியின் இறுதிநாளில் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு.... ஊருக்கு செல்ல தனது மாமாவின் வரவுக்காக காத்திருந்தாள்.....
ரேகா அவளைவிட்டு நகராமல் அவளுடனே இருந்தாள்.....
ரேகாவுக்கு மான்சியை பிரிவது தன் உயிரையே பிரிவது போல முகத்தை துக்கமாக வைத்திருந்தாள்.

“ஏய் மான்சி நீ ஊருக்கு போனதும் உடனே ஒரு செல்போன் வாங்குடி.... அப்பதான் தினமும் உன்கூட பேச முடியும்.... ரகுகூட நேத்து போன் பண்ணி உனக்கு ஒரு செல் வாங்கிக்கொடுக்கச் சொன்னான்.... நான் வாங்கித் தரவா மான்சி” என்று ரேகா கவலையுடன் கேட்க

“ம்ஹூம் அதெல்லாம் வேண்டாம் நான் எதுன்னா என் மாமாவோட செல்ல இருந்து பேசறேன்.... ஆனா நீ என் மாமா நம்பரை உன் அண்ணன்கிட்ட குடக்கதே.... அப்புறம் மாமா ஏதாவது தப்பா நெனைப்பாரு ரேகா ப்ளீஸ்”என்று மான்சி கெஞ்ச.... ரேகா சரியென்று தலையசைத்தாள்

மான்சிக்கு ஏன் இன்னும் மாமாவை காணவில்லை என்று கவலையுடன் கல்லூரியின் வாசலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

மான்சிக்கு மாமாவின் ஊர் பாபநாசம் போவதென்றால் ரொம்ப பிடிக்கும்..... அங்கே போய் இருக்கும் கொஞ்ச நாளில் அருகில் இருக்கும் முண்டன்துறை, மணிமுத்தாறு, பாபநாசம் அருவி, களக்காடு, பேச்சிப்பாறை... என்று தினமும் ஒரு சுற்றுவதுதான் அவளுக்கு வேலை.....

மாமாவின் மகன்கள் இருவரும் இவளைவிட இளையவர்கள் என்பதால் இவளுக்கு அவர்களுடன் அரட்டையடிக்கவே நேரம் பத்தாது....
இளவயதில் தன் தாயை பறிகொடுத்திருந்தாலும்.....
தன் தாயைவிட பலமடங்கு பாசத்தை கொட்டும் தன் மாமாவை மான்சி கடவுளுக்கு நிகராக எண்ணினாள்.

அவளுடைய காத்திருப்பு வீணாகாமல் அவள் மாமா வந்து சேர மான்சி உற்சாகத்துடன் எழுந்து அவரை நோக்கி போனாள்.

“மான்சியம்மா மன்னிச்சுக்கோம்மா பஸ் கிடைக்க கொஞ்சம் லேட்டாயிருச்சு..... எல்லார்கிட்டேயும் சொல்லிட்டயா நாம கிளம்பலாமா மான்சி” என்று அண்ணாமலை கேட்க

“ம் நான் எப்பவோ ரெடி மாமா உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்”.... என்ற மான்சி ரேகாவிடம் திரும்பி “நான் கிளம்பறேன் ரேகா” என்று கூற....

ரேகா சோகமாக தலையசைத்து மான்சிக்கு விடைகொடுத்தாள்........

(தொடரும்.....)

எழுதியவர் : (23-Sep-14, 1:26 pm)
பார்வை : 204

மேலே