பொம்மை

பொம்மையே உனக்கும் மனிதனுக்கும்
என்ன வித்தியாசம் ?
மனிதன்,
சில நேரங்களில் பணத்திற்காக
அடிமைப்போல பொம்மையாகின்றான்
சில நேரங்களில் பிறர் துன்பத்தை
கண்டும் காணாமல் பொம்மையாகின்றான்
ஆனால் ஒரு வித்தியாசம் கண்டேன்
நீ மனிதனைப்போல அல்ல
துன்பத்தைப் போல இன்பத்திலும் ஆடுவதில்லை !