நன்றி என் சொந்தங்களே - சந்தோஷ்

கவிதை சாலையில்
அகரம் பழகவந்தவனுக்கு
உற்சாக கருத்தளித்து
கவிஞன் என்று பெயர்கொடுத்த
எழுத்து தள உறவுகளே..!

முப்பத்தாறு அகவையில்
அடிவைத்த எனக்கு
வாழ்த்துமழையில் நனையவிட்டு
ஆனந்த குளிரில்
சந்தோஷ நடனமாடவிட்டீர்கள்..!


உங்கள்
கவிதைகள்
உங்கள்
எண்ணங்கள்
உங்கள்
தனிவிடுகைகள்
உங்கள்
கருத்துக்கள்
உங்களின்
முகநூல் என
யாவற்றிலும்
என்னை நீங்கள் வாழ்த்த

இதோ
என் உணர்ச்சிகளுக்கு
இதழ் முளைத்து
என்
நாடி,நரம்பு
தசை, புத்தி, இரத்தங்களில்
முத்தமிட்டுக்கொண்டே
என்னுடைய
இலட்சிய திசை நோக்கி
இன்னும் இன்னும்
அதீத வேகத்தோடு
புது உற்சாகத்தோடு
ஓட தூண்டுகிறது.

ஒரு வாழ்த்தில்
நூறாண்டு வாழ்ந்திடலாம்
நூறு வாழ்த்துக்களில்
ஒரே ஆண்டில் சாதித்திடலாம்.

சாதித்துவிடுவேன் தோழமைகளே..!!

என் விழியில் தேங்கும்
சில சந்தோஷ
கண்ணீர்த்துளிகளால்
எழுதுகிறேன்.

நன்றி ! நன்றி !! நன்றி !!!


-----------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (29-Sep-14, 10:35 pm)
பார்வை : 1194

மேலே