காரணம் நீதானே கண்ணே,,,,,

காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

ஏய் கண்விழியே ...
கண்டவுடன் காதல் கொண்டாய் ...
வரப்போகும் துன்பத்தை ....
அறியாமல் மயங்கினாய் .....
விரும்பினாய் .....!!!

காணவில்லை உயிரை
என்பதால் கலங்கி நிற்கிறாய்
கண் விழியே -அத்தனைக்கும்
காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

திருக்குறள் : 1172
+
கண்விதுப்பழிதல்
+
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 92

எழுதியவர் : கே இனியவன் (2-Oct-14, 1:27 pm)
பார்வை : 83

மேலே