மயக்கும் கண்கள்
விண் தாமரைகள்
வான் நட்சத்திரங்கள்
கண் தாமரைகள்
உன்னெழில் முகத்தில்
எத் தாமரையை
நான் காண்பேன்
எத் தூண்டிலுக்கு
நான் இரையாவேன்
இரை ஆவேனோ
அல்லது இறை காண்பேனோ
உன் சுடர் விழி
விளக்கில் மாட்டிக் கொண்டால்
நள் இரவினிலும்
வெளிச்சம் காண்பேன்
பட்டப் பகலிலும்
பரிதி பார்கேன்
ஏகாந்த ஏக்கத்தின்
கனவில் நீ வந்தாய்
கனவு அகன்றால்
இனிமை போகும்
என் செய்வேன் நான்
நீ கூறாய் ஆரணங்கே