காதல் தவிப்பு

பாதி வழிவிட்டுப் போவதென்ன?-உயிர்
....பற்றி எரியுது ஆயிழையே
நீதி இதிலில்லை வாநெருங்கி-உளம்
....நித்தம் துடித்திடு மேநொறுங்கி
சாதி மறந்திட்டு காதலித்தோம்-இன்று
....சத்தம் தொலைத்துநீ செய்வதென்ன?
ஏதும் தவற்றினை நான்புரிந்தால்-சொல்லு
....இன்றே உயிர்விட்டு மாய்ந்திடுவேன் !!

எழுதியவர் : அபி (19-Oct-14, 12:02 pm)
பார்வை : 166

மேலே