மனதிற்குள் வரலாமா

கண்களில் சிரிக்கின்றாய்
உதடுகளில் மணக்கின்றாய்
பவ்ய முகம்காட்டி - மனதை
பக்குவப்படுத்துகின்றாய்!
உன் சின்ன சிரிப்பிற்கு
என் சிந்தனைகளை விற்றேன்
உன் உதடு சொல்லுக்கு
என் உலகையே கொடுத்தேன்
உன் உள்ளிருக்கும் இதயத்தில்
என் நினைகளுக்கும்
கொஞ்சம் இடந்தருவாயா?

எழுதியவர் : சீர்காழி சபாபதி (19-Oct-14, 12:12 pm)
பார்வை : 243

மேலே