நிம்மதி எங்கே

கண்மணி!
நானுனை கண்டேனடி!
காதலில் விழுந்தேனடி!

ஆயிரம் சூரியர் தாக்கிடும் போதும்
உன் குளிர் போதுமடி!
ஆயிரம் சொந்தம் நீங்கிடும் போதும்
உன் துணை வேண்டுமடி!- இன்ப
ஆனந்த ஊற்று தோன்றியதாலே
ஆசைகள் வளர்த்தேனடி !

நீயில்லாமல் ஒரு நாளும் கூட
இன்பமாய் இனி செல்லுமா?
உன்னையன்றி ஒரு ஜீவனும்
உண்மையாய் எனை விரும்புமா?- தன்
சேயினை ஒரு கும்பலில் இழந்த
தாயின் நிலை வேண்டுமா?

அமுதே எனதுயிர் உனக்கேயினி
வந்தடைந்தேன் உன் சந்நிதி!-என்
உயிரை உன்னிடம் தந்து விட்டேன்
தந்திடுவாய் என்றும் நிம்மதி!

எழுதியவர் : karuna (20-Oct-14, 9:10 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : nimmathi engae
பார்வை : 95

மேலே