வாழ்க்கை வாழ்வதற்கே

பெண்களின் சுதந்திரம்
என்றுமே பறிக்கப்படுவதில்லை,
கொடுத்தால் தானே பறிப்பதற்கு!!

வேண்டாம் எனக்கொரு தனி உலகம்;
நான் கேட்பதெல்லாம்...
எனக்கென ஒரு தனி இடம்!!
எனக்கென ஒரு தனி கனவு!!
எனக்கென ஒரு தனி உறவு!!

எது என் குற்றம்??
பெண்ணாகப் பிறந்ததா?
எழுத்தின்மேல் காதல் கொண்டதா?
பெண்ணுரிமை படித்ததா?
சுயஉரிமை தேடியதா?

பெண்ணென என்னைப்
போற்றி பாதுகாக்க வேண்டாம்;
உன்னைப்போல் ஒரு சகமனுஷியாகப் பார்!!
அதுவே போதும்!!
என்னை வாழவைக்க வேண்டாம்!!
வாழ விட்டாலே போதும்!!
வாழ்க்கை வாழ்வதற்கே!

எழுதியவர் : கீதா (26-Oct-14, 3:11 pm)
பார்வை : 141

மேலே