நம் சொத்து -நம் திறமைகளே
சின்னச்சிறு வயதினிலே -கவி
புனைய ஆசை கொண்டேன்!
கவிக்கு சில சொற்கள் கிடைத்தன
சொல்லமைப்பு இல்லாமல்
சொல்லமைப்பை உருவாக்க முயலும்
முன்பே சொற்கள் மறந்து போயின!
எழுதிவைத்து அமைத்துப் பார்த்தால்
அடிகள் கொஞ்சம் பிறழ்ந்தன!
பிறழ்ந்த வற்றைப் பின்தள்ளி
புதியவற்றை தேடலாயினேன் !- ஆம்
என் தேடலுக்கு முடிவு உண்டு -ஆனால்
என் திறமைக்கு முடிவில்லை !-ஏனெனில்
என் சொத்தான முத்து
என் திறமைகளே !
தேவைக்கேற்ப அவற்றைப்
பயன்படுத்துவது நன்று!
தேவைகள் இருந்தும்
பயன்படுத்தாமல் இருப்பது
நன்றன்று!
சொத்தான திறமையை
சொத்தையாக்கி போடாமல்
முடியும் வரை அதை
முயன்றுப் பார்ப்போம் !
சத்தில்லாதவன் சோர்ந்து போகலாம்-கையில்
சொத்துள்ளவன் சோர்ந்து போகலாமா?