தேடுகிறேன்

தேடுகிறேன்!!!

தேடுகிறது உள்ளம்!
புதையுண்ட மாணிக்கத்தை
அல்ல!
மனிதருள் மாணிக்கத்தை

அலைகிறது மனம்!
சுகத்தை தேடி பெண்ணை
அல்ல!
மாந்தரின் சுகமான நிம்மதியை!

விழிநீர் சிந்தும் என்னுள்ளம்!
மறைந்தவர் நினைத்து
அல்ல!
இவன் மறை செயலுக்காய்!

விடை பெற நினைக்குது மனம்!
இல்லிடத்தை விட்டு
அல்ல!
இவர் உலகத்தை விட்டு!!!!!!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (28-Oct-14, 8:02 pm)
பார்வை : 192

மேலே