கருத்திலே பூத்த கவி -அபிக்கூ என்ற 217788- என்ற கவிதைக்கு

217728--என்ற அபிக்கூ கவிதைக்குக் கருத்தாகப் பதிந்த கவிதை இது....

மயக்கம் மனதில்
வரவே துணிந்தேன்
தயக்கம் விடுத்தேன்- கைகளில்
தமிழை எடுத்தேன்! மகிழ்ந்தேன்!

விழுந்து கிடந்த
மனமும் புதிதாய்
எழுந்து நடக்கக் கண்டேன்!
இனிமேல் விழவோ? மறந்தேன்!

மணித்துளி ஓடும்!
மின்செலவு ஏறும்!
கணினியே உலகென மாறும்!
கள்வெறி தமிழையா மீறும்!?
=============================
அய்யா எழுதியிருக்கிறேன்!
பொய்யா நினைக்காதீர்!
மெய்யாய்த் திருத்தித் தாரும் !
மிகவும் நன்றியாய்ப் போகும்!
============================ நன்றென எழுதும் அபியாரின் கவிதையினைச் சென்றே படியுங்கள்======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (30-Oct-14, 6:43 pm)
பார்வை : 65

மேலே