கலாப காதலோ

அன்பினாலே அலைந்தேன்
ஆசையாலே மலர்ந்தேன்
இன்பம் தேடி இசைந்தேன்
ஈகையினால் கசிந்த காதல் தேன்!

உண்மை அன்பை பகிர்ந்தாள்
ஊமை விழியால் அழைத்தாள்
எங்கும் நிறைந்து என்னை கவர்ந்தாள்
ஏற்றம் வேண்டி தினம் தினம் போற்றம் !!

ஐயம் அகலாது மையல் கொண்டது புயல்
ஒப்பிட முடியாதழகெனும் அவலொரு மயில்
ஓங்கிட வேணும் எந்தன் நினை வென்பதே இயல்
ஒளடகம் அங்கே ஆரம்பமோ !

முற்றுபெறாது தொடரும் முற்று புள்ளியாய் காதல் !!

எழுதியவர் : கனகரத்தினம் (31-Oct-14, 4:07 pm)
பார்வை : 170

மேலே