நீ வருவாயா

வசந்தங்கள் தந்திடவே
வாசனையாய் பூத்திடவே
வாரி வழங்கும் வள்ளலாக
நீ வருவாயா !!

மங்கையை நேசிக்கவே
மார்போடு அணைத்திடவே
மாலை சூடும் மாதவனாக
நீ வருவாயா !!

காதலை தந்திடவே
காதலாகி மாறிடவே
கவி பாடும் கம்பனாக
நீ வருவாயா !!

மாயங்கள் செய்திடவே
மறுப்பேதும் சொல்லாமல்
மாமன் மகனாக
நீ வருவாயா !!

எழுதியவர் : யாதிதா (5-Nov-14, 1:05 pm)
Tanglish : nee varuvaayaa
பார்வை : 112

மேலே