வானம் உன் வசப்படும்
தோழா......!
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி
மனம் சோர்ந்திடாமல் இருப்பதே
சிகரத்தை தொட சிறந்த வழி ...
காற்றுக்கு தடை யார் போடுவது - உன்
சிந்தனைக்கு வேலி யார் இட்டது ...?-தோழா ...!
உரத்த சிந்தனையால் உலகை புரட்டிப் போடு
தன்னம்பிக்கை சிறகை விரித்து இத்
தரணிக்கு உன்னை உணர்த்து ....
வித்தின் ஓட்டப் பந்தயத்தில் ஓடி
தாயின் கருப்பையில் ஜெனிததவனே
நிழலில் நீ இளைப் பாருவதை விட - பலர்
தங்க நிழல் தரும் மரமாய் இரு .......
பாறையானவனே... .! உளியின் ஒத்தடத்தில்
உன்னை பதியன் போடு ! புடம் போடப் போட
மெருகேறும் தங்கத்தின் தரம் போல் - இத்
தரணிக்கு உன்னை உணர்த்த தடைகளை தாங்கிக் கொள் ..!
தோழா.......!
சிகரம் தொட்ட உனக்கு வானம் வெகு தூரம் இல்லை
இலக்கை அடைய முதல் அடி முக்கியமல்லவா ...?- தோழா
அன்புச் சங்கிலியில் மனித உணர்வுகளை பிணைத்து
மனிதத்தில் ஏறி வானம் தோடு ..! வானம் உன் வசப் படும் ...!