நானும் காதலில்

என்னை வேண்டும் என்றாய்
என்னை மட்டுமே வேண்டும் என்றாய்
என்னை கவி பொருளாக்கி
என்னை மட்டுமே வர்ணித்தாய்

சிறு சிறு சிதறல்களாய்
சின்ன சின்ன சினுங்களை
சிறகடித்து பறக்கும்
பறவை போல
வர்ணித்த உன்னை
கவிஞன் என்பதா ?

இல்லை

பூட்டி கிடந்த என மனசை
பூவின் இதழ் போல்
மெல்ல மெல்ல திறந்து
இதயத்தில் இடம் பிடித்தாயே
உன்னை கள்வன் என்பதா ??

எது எதுவாக இருப்பினும்
அது அதுவாகவே
உன்னை நேசித்து
உயிர் மூச்சு உள்ளவரை
உன்னக்காக வாழ்ந்திடுவேன் !!

எழுதியவர் : யாதிதா (11-Nov-14, 1:24 pm)
Tanglish : naanum kathalil
பார்வை : 127

மேலே