நேரு

நேரு மாமா

மேரு மலையொத்த எங்கள்

நேரு மாமாவே!

பஞ்சசீலம் தந்த எங்கள்

நேரு பண்டிதரே !

அணிசேரா அறம் வகுத்த

ஆசிய அணையா விளக்கே!

வெண்மையும் ஒற்றை ரோசாவும்

உனது அடையாளம்!

ஒளிரும் பாரதத் தாயின்

ஒப்பில்லா புதல்வனே!

பாரதத் தாயின் மூத்த

சமாதான புறாவே!

வருங்கால வலிமையான பாரதத்தை

வளமாக்கி தூய்மைகாத்திட

நவம்பர் 14ல்

சூளுரைப்போம் நேருவின் பெயரால்

வாழ்க நேருவின் புகழ்

வளர்க இந்தியா வலிமையாய் வல்லரசாய்!

எழுதியவர் : வீரமணி venkat (13-Nov-14, 11:16 pm)
Tanglish : neru
பார்வை : 243

மேலே