இப்படி பார்த்தால் எப்படி

இப்படி பார்த்தால் எப்படி !
உன் கற்றை விழிப் பார்வை
குத்தி கிழிக்குதடி என் மனதை !
என்பது வயதிலும்கூட எனை
ஏதோ செய்யுதடி உன்
வெட்கம் !
எட்டாண்டுகள் காதல் கர்ப்பம்
தாங்கி நான் பெற்ற முதல்
குழந்தை அல்லவா நீ !
நாட்பட்ட பிரசவம்
என்பதாலோ என்னவோ இன்னும்
மழலையாகவே நீ !
நடை பழகிக் கொண்டிருக்கிறாய்
என் கரம் பிடித்து நீ !
காது கேளா நிலையிலும்
என் காதில் கேட்கிறது
உன் பெயர் மட்டும் !
தேன் துளிக்கு மத்தியில்
பொருள் தேடும் என் பார்வையில்
தெளிவாய் உன் முகம் மட்டுமே !
பொறாமையாய் இருக்குதடி உன்
மடியில் உறங்கும் என்
பேரனைப் பார்க்கையில் !
இதற்காகத்தான் இறக்கத் துடிக்கிறேன்
இறுதியாய் உன் மடிமீது துயில !