தினம் பூத்து உதிர்கிறேன்
நெடுஞ்சாலையோர அரளிச் செடி நான்
உனக்காக அழகானேன்
நம் காதலை பாக்களாய் சுமந்தபடி !
காற்றில் அசையும் போதெல்லாம்
உதிர்க்கிறேன் மகரந்தமாய்
என் மனதை
ஒன்றாவது தொட்டுவிடாத உன்
மனமெனும் சூழ் முடியை
என்ற எண்ணத்தோடு !
ஏனோ தெரியவில்லை
காதலைப் பொருத்தவரை
பூபெய்தாமலே நீ !
தினம் பூத்து உதிர்கிறேன் நான்