புலவரே கருமலைத் தமிழாழனே

(திரிபங்கி)
வேரின் விழுதுகள் கற்பனை பூக்கும் வீணை மத்தள மாகிறது
தூரிகை எழுத்தில் ஒப்பனைப் பூக்கள் வீணரைச் சாடி காய்கிறது
காரிகை வடிவில் அற்புதத் தமிழில் மலர்விழி சுவடுகள் படைப்பாளரே
சீரிய கவியே செப்பிய கவியே புலவரே கருமலைத் தமிழாழனே
(1)
வேரின் விழுதுகள்
தூரிகை எழுத்தில்
காரிகை வடிவில்
சீரிய கவியே



(2)
கற்பனை பூக்கும்
ஒப்பனைப் பூக்கள்
அற்புதத் தமிழில்
செப்பிய கவியே



(3)
வீணை மத்தள மாகிறது
வீணரைச் சாடி காய்கிறது
மலர்விழி சுவடுகள் படைப்பாளரே
புலவரே கருமலைத் தமிழாழனே
இது ஒருபாடலை மூன்று பகுதியாக பங்கிட்டாலும் பொருள் மாறாமல் பாடுவது
புலவரின் திரிபங்கி
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
இருந்தாலும் இது என் புது முயற்சி

எழுதியவர் : சு. ஐயப்பன் (21-Nov-14, 5:03 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 104

மேலே