கவிதை திருடனை களி தின்ன வைப்போம்

மணல் திருட்டு...!
மரக்கட்டைகள் திருட்டு...!
மழலைகள் திருட்டு...!
இந்த பட்டியலில்
தமிழ் அன்னைக்கு
கவிதையாக
படைத்த படையலை திருடி...!
இணையத்தில் இணைத்து
மார்தட்டிக் கொள்கிறது
மானங்கெட்ட கும்பல்...!
என் சகோதர்களும் சகோதரிகளும்
சளைக்காமல்....!
மூளையை சாறு போல் பிழிந்து
சாகக்கிடப்பவனையும்
சிலிர்த்து எழச்செய்யும் கவிதைகளை....!
சத்தமில்லாமல் திருடுகின்றாயே
சாபம் கொடுப்போம்
சீக்கிரம் சாவாய் என....!
கவிதை திருடு என்றதும்
உயிர் எழுத்துக்கள் எல்லாம்
உயிரற்று கிடக்கின்றன....!
மெய்யெழுத்தெல்லாம்
மருத்துக்கிடக்கின்றன....!
உயிர் மெய்யெழுத்தெல்லாம்
சாகக்கிடக்கின்றன....!
கவிதைகளை திருடும்
கழுதைகளே....!
நீ திருடியது
நாங்கள் எழுதிய
கவிதையைமட்டுமில்லை....!
தமிழையும்
தமிழ் அன்னையையும்
சேர்த்துத்தான்....!
கடை தேங்காயை எடுத்து
வழி பிள்ளையாருக்கு
உடைக்கின்றாயே....!
நீ என்கையில் கிடைத்தால்
சிதறு தேங்காய் தான்....!
கவிதை திருடுவதை
யோசிப்பதிற்கு பதில்
எழுதுவதற்கு யோசி....!
தமிழ் அன்னை
சொரிவாள் தமிழ்பால்....!
நாங்கள் வாழ்த்துவோம் நட்பால்...!
மீறி திருட நினைத்தால்
உனக்கு சுடுகாட்டில் பால்....!
உன் மண்டையில்
கவித்திறன் இருந்தால்
கவிதை தானாக வரும்....!
களிமண்ணல்லவா
கொட்டிக்கிடக்கிறது
கய எண்ணம் தான் வரும்....!
கவிதைகளை திருடும்
கய கும்பலை....!
காக்கி சட்டைகளிடம் காட்டி....!
கசை அடி கொடுத்து
கம்பி எண்ணவைத்து
களி தின்ன வைப்போம்....!