நீ இல்லா நேரம் வலிக்குதடா

நீ இல்லா நேரம் வலிக்குதடா..
காதலா....
சேர்ந்திருந்த நேரங்களின் நினைவுகள்
தீயாய் சுடுகின்றன....

மௌனம் நிறைந்த இந்த நொடிகள்
எனக்குள் தரும் பயத்தில்
கண்கள் கடலாய் மாறி
கதறுதே காதலா......
கண்ணீர் துடைக்க சீக்கிரம் வா...

அழுவதை விட கொடுமையடா
அதை மறைத்து சிரிப்பது.....
புரியாதோ உனக்கு என்
கண்ணீர் கவிதைகள்....

வேண்டுமென்றே சண்டை போட்டு
பேசாமல் போன நாட்களின்
காலில் விழுந்து கேட்கிறேன்
அதில் ஒரு நொடியேனும் திரும்ப கிடைக்காதா என்று....

வழிகள் நிறைந்த நொடிகளின் விளிம்பில்
வாழ்க்கை நகரவும் முடியாமல் நிற்கவும் தெரியாமல்....
உன் நினைவு மட்டுமே உணவை மாற....
உயிருள்ள பொம்மையாய் இன்னும்
எதனை நாள் நீடிப்பேனோ....

கடைசியாய் நம் சந்திப்பின் போதே
சொல்ல நினைத்தேன் காதலா....
எந்த காதலியின் கண்ணில் தூசி பட்டாலும்
துடிப்பயோ அந்த காதலியின்
உயிர் உன் பிரிவால்
கொஞ்சம் கொஞ்சமாய் தீர்வதற்குள்....

திரும்பி வந்துவிடு...
இல்லையேல்....
எதற்கு மேல் எதையும் சொல்லி உன்னை
காயப்படுத்த விருப்பமில்லை காதலா.....
விரைந்து வா.....

எழுதியவர் : சந்தியா பிரியா (27-Nov-14, 12:40 pm)
பார்வை : 501

மேலே