கலங்கரை விளக்கம்

பரிச்சை இல்லை..,
ஆசிரியரின்
அச்சுறுதல் இல்லை...

ஆனாலும்
வாஞ்சையாய் வாசிக்கிறது
நீலக்கடலை,,,

வாசித்த கடலையே
வாசிக்கிறது,
ஒற்றைக்கண்ணால்,

இரவும் நீள்கிறது,
வாசிப்பும் நீள்கிறது,

அவ்வளவா இருக்கு
கடலுக்குள்....


--தாஸ்--

எழுதியவர் : அ.நா.தாஸ் (27-Nov-14, 4:14 pm)
சேர்த்தது : வைரமுத்து தாசன்
பார்வை : 130

மேலே