பொங்கி எழுந்திடு

இடம்பெயர்ந்து வாழும் என் உயிர் துடிப்புகள்
துடிக்கும் போதெல்லாம் எனக்கு வலிக்கிறதே
கடல் தாயே உன்னை பழிக்கிறேன்
ராமன் போட்ட பாலத்தை விளுங்கிவிட்டாயே

இது உனக்கே பொறுக்குமா அப்பாவி உயிர்களை
சுரையாடி கொண்டிருக்கிறார்கள்... கூக்குரல்
கேட்கவில்லையா எனக்கே கேட்கிறது.. இயற்க்கை,
நியதி, தர்மம் காக்கும்... என்று நம்புகிறவன் நான்...
என் நம்பிக்கையை பொய்க்காதே

எல்லாம் இழந்தப்பின் வாழ்ந்தென்ன பயன்
உன் பொறுமைக்கு இது நேரமில்லை
மானம் நீப்பின் உயிர் நீப்பர் எங்கள் குலத்தவர்
பொங்கி எழுந்திடு தீமையை அழித்திடு
உன் பாவத்திற்கு இதுவே பரிகாரம்...

எழுதியவர் : நித்திலன் (4-Dec-14, 10:03 am)
சேர்த்தது : நித்திலன்
Tanglish : ponki ezhunthidu
பார்வை : 752

மேலே