பொன் நிலவே

காலங்கள் பலக் கடந்து நின்று
உலகெங்கும் இருளில் ஒளித்தரும் வெண்ணிறத் தேவதையே!

எத்தனை முறைத்தேய்ந்தாலும் மீண்டும்
மீண்டும் வளர்வேனென்று வளர்கின்றாயே!

உனைக்கண்டுத்தான் உலகிலுள்ள அனைவரும்
முயற்சியைக் கற்றிருப்பார்களோ!

என் அழகியக் கவிநிலவே!
என் இனியப் பொன் நிலவே!

எழுதியவர் : priyavathani (4-Dec-14, 9:18 pm)
சேர்த்தது : priyavathani
பார்வை : 102

மேலே