காதல் சொல்லும் மெட்டெடுப்பேன் - இராஜ்குமார்

காதல் சொல்லும் மெட்டெடுப்பேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பகலவன் பழிதீர்க்கும்
மயக்கமில்லா மதியபொழுதில்
அவள் வெக்கத்தை வேகமாய்
வேடிக்கை பார்த்தவுடன்
நதிக்கரையை நகல் எடுத்து
அவள் பாதச் சுவட்டின்
பக்கம் வைத்து
நகலின் நடுவில்
நழுவாமல் நகர்கிறேன் - அவள்
நறுமண நினைவுகளுடன்
இதோ அவள்
பாதச் சுவட்டை
தொடர்ந்து துரத்துது
நகல்
அவள் பாதச் சுவட்டின்
பக்கம் வந்தால்
நண்டுகள் கூட
தொண்டுகள் செய்யும்
கரையைத் தாண்டி
அலைகள் வந்து
அவள் சுவட்டை
அழிக்க பார்த்தால்
அறைகள் வாங்கி
தொலைந்து போகும்
மணலில் புதையும்
அவள் பாதச்சுவடு
அனலாய் போனால்
எனக்கென்ன
இனி - அவள்
விட்டுப் போகும்
பாதச் சுவட்டை
தொட்டு கொண்டே
காதல் சொல்லும்
மெட்டெடுப்பேன்
- இராஜ்குமார்