காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 4
சிறகை உதிர்த்த
அந்த பறவைக்கு தெரியாது -
ஒரு கவிஞனின் கையில்
அது தூரிகையாய்
இன்னும் பல கவிதைப்பறவைகளை
பறக்க விடுமென்பது.
பின் குறிப்பு :-
இனியும் இதே தலைப்பில் என் கவிதை நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க பல படைப்புக்கள் உருவாகட்டும்.