சலனம் கொள்ளுதே மனது

மெழுகில் வார்த்தே ,
சிலையாய் வடித்தானோ ..

மின்னும் இவள் ,
தேகம் கண்டே ..

தொட்டுப் பார்க்க ,
சலனம் கொள்ளுதே மனது ..

இழுக்கும் இதழ்களுக்கு ,
இணை ஒன்றும் அறியேன் ..

இழுத்துக் கொடுக்கையில் ,
மங்கிப் போகுமோ கண்கள் ..

முகத்தில் மிதக்கும் ,
ஒற்றை முடியாய் நான் ..

விரும்பி வருடுமோ ,
இவள் விரல்கள் ..

போதை ஏற்றும் ,
பாவை இவள் கண்கள் ..

போதும் போதும் ,
எனும்வரை விட தோணாதோ ..

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (6-Dec-14, 10:45 am)
பார்வை : 114

மேலே