பூத்து விடு மீண்டும் நீ
இப் புவியில் பூத்த
புனிதமான பூவே
உன்னை பார்த்து
நான் பூரித்தது ஏனோ?.
பூத்த சில நாட்களில்
எங்கே நீயும் காணோம்
புண்ணாகி போனதே
என் இதயம்.அது ஏனோ..
புரியவில்லை எனக்கு
நான் புன்னகைக்க
மறந்தது ஏனோ
புதிராய் இருக்கிறேன் நானோ.
புண்ணியம் கிடைக்கும் உனக்கு
பூத்து விடு மீண்டும் என்
கண்களுக்கு பூரித்து கொள்கிறேன்
உன்னை பார்த்தாவது..