உதவிடுவீர் உள்ளங்களே உள்ளவரை

தாயில்லா வேளையில் தாயாக
கடமையை உணர்ந்த சேயிவன் !

பாசமிலா உலகிலே பொறுப்பாக
பந்தத்தை கையிலே சுமப்பவன் !

வழியுது ஏக்கமும் விழிகளிலே
வலியது தாங்கிடும் இதயத்திலே !

இளமையும் கடக்குது இதனாலே
வலிமையும் கூடுகிறது மனதிலே !

நம்பிய உடன்பிறப்பும் கரங்களிலே
தம்பியோ தங்கையோ அணைப்பிலே !

அன்னையும் அலைகிறார் பணிதேடி
தன்னையும் வளர்த்திட வழித்தேடி !

புத்தகம் சுமந்திடவோ வழியில்லை
வித்தகம் புரிந்திட இயலவில்லை !

கண்டுக் கொள்வார் எவருமில்லை
தொண்டு உள்ளமும் வளரவில்லை !

வந்துப் பிறந்திட்டோம் வையத்தில்
வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தில் !

வழியும் காட்டிடுங்கள் விழியுள்ளோர்
வாழ உதவிடுங்கள் வசதியுள்ளோரே !

இதுபோன்ற இதயங்கள்பல இவ்வுலகில்
இதயங்கள் இணைந்தால் உதவிடலாம் !

வெறுங்கையோடு வருபவர்தான் எவருமே
வெற்றுடலே திரும்புகையில் அனைவருமே !

புரிந்திடுவீர் வாழ்க்கையின் தத்துவத்தை
உதவிடுவீர் உள்ளங்களே உள்ளவரை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Dec-14, 8:56 am)
பார்வை : 207

மேலே