தோல்விகளைத் தகர்த்துவிடும்

விழுகின்ற கண்ணீருக்குத் தெரியும்
நெஞ்சத்தின் வலி அதனால்தான்
மடமடவென வந்துக் காட்டிவிடும்

தெறிக்கின்ற வார்த்தைகளுக்குத் தெரியும்
குழப்பத்தின் காரணம் அதனால்தான்
படபடவென வந்துச் சொல்லிவிடும்

விழிக்கின்ற கண்களுக்குத் தெரியும்
பயத்தின் முடிவு அதனால்தான்
திருதிருவென முழித்துக் துடித்துவிடும்

சுருங்குகின்ற இமைகளுக்குத் தெரியும்
தயக்கத்தின் விளைவு அதனால்தான்
சிறுசிறுவென சுருங்கி மாட்டிவிடும்

எழுகின்ற நம்பிக்கைக்குத் தெரியும்
செயலின் முடிவு அதனால்தான்
பொடிப்பொடியாய் தோல்விகளைத் தகர்த்துவிடும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-Dec-14, 10:31 am)
பார்வை : 80

மேலே