விதவையாய் வாழாதே

பூவும்,பொட்டும் இல்லாத போதே
புரிந்து கொண்டேன் உன்னை நான்
புது வாழ்கை உனக்கு வேண்டும் என
புரிந்து கொள் என்னை நீ.

புது வாழ்க்கை தருகிறேன் நான் உனக்கு
புன்னகைத்து விடு.நீ எனக்கு
புருஷனாய் வந்து விடுகிறேன் நான் உனக்கு
புது வாழ்க்கை தொடங்கியே நாம்.

பட்ட மரம் பூத்தது போல் நான்
உன்னை பூக்க வைத்து
புது உலகம் கண்டிடலாம்
பூரித்தே வாழ்ந்திடலாம்..

புரட்சியாய் நாம் வாழ்ந்து
புரட்டியே போட்டிடலாம்
மறுமணம் வேண்டும் என்று
விதைவைகள் வாழ்வு பெற..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (14-Dec-14, 10:58 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 55

மேலே