என் மகள்

அகத்தியன் அருளிய
தமிழை விட
என்னவள் நாவில் வரும்
சொற்களே தேனமுது...!

மழலை மொழியில்
மனதை பறித்தவளே...!
தரையில் வந்த
தாரகையே...!
பூன்னகை சிந்தும் பூகம்பமே....!

பெருமிதம் கொள்கிறேன்
நீ என் மகளானதற்கு அல்ல
நான் உன் அன்னையானதற்கு

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (15-Dec-14, 9:01 pm)
Tanglish : en magal
பார்வை : 832

மேலே